பண்டிகைகளும் திருமணங்களும் ஆடம்பரமான விருந்துகளால் நிரம்பி ஒரு சுவையான உணர்வுபூர்வமான மகிழ்ச்சியைத் தருகின்றன. எல்லா உணவுகளையும் சுவைத்துப் பார்க்க ஆசையாக இருந்தாலும், அவை பெரும்பாலும் வறுத்த, நெய், எண்ணெய் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளாகும். இந்த உணவுகளில் பெரும்பகுதியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட இயலாது. இந்த வலைப்பதிவில் சர்க்கரை நோயாளிகள் பண்டிகைகளில் ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் இருக்கும்படி புத்திசாலித்தனமான உணவுத் தேர்வுகளை எப்படிச் செய்வது போன்றவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
விழாக்களில் ஆரோக்கியமாக சாப்பிடுவது எப்படி?
திருமணம் அல்லது பண்டிகை விருந்துகளில் புத்திசாலித்தனமான மற்றும் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் முக்கியம். உங்களுக்குப் பிடித்த உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, லேசான, சத்தான மற்றும் சரியான அளவில் உண்பதில் கவனம் செலுத்துங்கள்.
- பஜ்ஜிகள் மற்றும் போண்டாக்களுக்குப் பதிலாக காய்கறி சாலடுகள், சுண்டல், மசாலாப் பொருட்களுடன் வேகவைத்த பருப்பு வகைகள் அல்லது சூப்களை உண்ணுங்கள்.
- பொரித்த வடைகளுக்கு பதிலாக இட்லியைத் தேர்வு செய்யுங்கள். ராகி அல்லது சிறுதானிய இட்லிகள் கிடைக்குமானால், அவை இன்னும் சிறந்த தேர்வாக இருக்கும்.
- எளிய சாம்பார் & ரசத்தை தேர்வு செய்யுங்கள். இது பருப்பு கொண்டு செய்யப்படுவது. புரதம் மற்றும் உடலுக்கு நல்லது. அதிக எண்ணெய் கொண்ட குருமா மாதிரியான கனமான குழம்புகளை தவிர்க்கவும்.
- தோசை பெறும்போது எண்ணெய் இல்லாத அல்லது குறைவான எண்ணெய் கொண்ட தோசையைக் கேளுங்கள். சிறுதானிய தோசைகள் இருந்தால் அவை ஒரு நல்ல தேர்வு.
- எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் மாதிரி லேசானவற்றைத் தேர்வு செய்யவும். சிறுதானிய சாதம் இன்னும் நல்லது. பிரியாணி போன்ற கெடுதலான உணவுகளைத் தவிர்க்கவும்.
- காய்கறி வகைகள் அதிகம் சாப்பிடுங்கள்.
- தேங்காயும் மசாலாவும் அதிகம் இருக்கும் சட்னிகளை தவிர்த்து, தயிர் சேர்த்த காய்கறி ராய்தா சாப்பிடுங்கள்.
- சர்க்கரை அதிகம் இருக்கும் இனிப்பான ஷர்பத், குளிர்பானங்களை தவிர்த்து, மசாலா மோர் அல்லது இளநீர் குடிக்கலாம்.
- கல்யாணம் மற்றும் பண்டிகைகளில் அவசியம் பல இனிப்புகள் இருக்கும். அவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் அல்லது மிதமான அளவில் மட்டும் சாப்பிடுங்கள். அவற்றுக்கு பதிலாக பழ சாலட், வெல்ல பாயசம், உலர்ந்த பழ லட்டு சாப்பிடலாம்.

திருவிழா மற்றும் கல்யாண விருந்துகளில் அளவாக சாப்பிடும் முறைகள்
- பண்டிகை விருந்து ருசியாக இருக்கும். ஆனால் அளவாக சாப்பிட்டால் தான் சோம்பல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
- வாழை இலையோ, தட்டோ எதுவாக இருந்தாலும் குறைவான அளவில் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்
- மெதுவாக சாப்பிடுங்கள். விரைவாக சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். சுவையை ரசித்துக்கொண்டே மெதுவாகச் சாப்பிடுங்கள்.
- நிறைய உணவு வகைகள் இருந்தால் அனைத்தையும் சிறிய அளவில் எடுத்துக்கொள்வது அளவாக, அதேசமயத்தில் பல வகை உணவுகளை சுவைத்ததாக இருக்கும்.
- சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடந்தால் செரிமானம் நன்றாக இருக்கும். உடம்பும் சோம்பல் இல்லாமல் இருக்கும்.
உரிய அளவில் தண்ணீர் குடியுங்கள்
- நம் உடல்நலனுக்கும் செரிமானத்துக்கும் தண்ணீர் மிகவும் முக்கியம். அதேசமயத்தில் பண்டிகைகளில் நன்றாக தண்ணீர் குடிப்பது பசியைக் குறைத்து அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க உதவும்.
- மேலும், உணவுக்கு முன்பும் பிறகும் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்.
- பாயாசம், பாதாம் பால் பதிலாக இளநீர் கிடைத்தால் அதைத் தேர்வு செய்யுங்கள். இது எலக்ட்ரோலைட் நிறைந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
- இனிப்பான குளிர்பானங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக நன்னாரி சர்பத், சீரக நீர் அல்லது புதிய பழச்சாறுகள் கூட நல்ல தேர்வு தான்.
பஃபே விருந்து உணவு
பஃபே உணவுகள் இறுக்கும் பகுதியில் நிறைய உணவு வகைகள் இருக்கும்.
எதை எடுக்கலாம் என்று தெரியாமல் அதிகம் சாப்பிட வாய்ப்பு உள்ளது. தட்டில் எதையும் எடுக்கும் முன், எல்லா வகைகளையும் பார்த்து சிந்தித்து தேர்வு செய்யுங்கள்.
தட்டின் பாதியை காய்கறி மற்றும் புரத உணவுகளால் நிரப்புங்கள். காய்கறி பொரியல், பருப்பு வகைகள், பன்னீர் மாதிரியான சத்துகள் அதிகம் உள்ள உணவுகள் முதலில் இடம் பிடிக்கட்டும். பிறகு தட்டில் மீதம் உள்ள இடத்தில் சாதம் அல்லது கார்போஹைட்ரேட் வகைகளை சேருங்கள்.
இது விஷேசங்களிலும் ஆரோக்கியமாக சாப்பிட உதவும்.
முடிவில்சர்க்கரை நோயாளிகள் பண்டிகைகளில் ஆரோக்கிய உணவு வழிகள்
திருவிழா, கல்யாணங்கள் எல்லாம் மகிழ்ச்சி, சந்தோஷம், சுவையான உணவுகளோடு நிறைந்தவை. நாமும் சிந்தித்து சாப்பிட்டால், ஜீரணக் கோளாறு இல்லாமல், குற்ற உணர்வும் இல்லாமல் அனைத்தையும் ரசிக்க முடியும். அளவாக சாப்பிடுவது, சத்தான உணவுகளை தேர்ந்தெடுப்பது, இந்த சிறிய பழக்கங்கள் உங்கள் உடல் நலத்தையும், ஆனந்தத்தையும் சமமாக வைத்திருக்கும்.
அடுத்தமுறை விருந்துக்கு சென்றால், சாப்பாட்டில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள். திருவிழாக்களில் சுகாதாரமாக சாப்பிடுவதையும் முன்னிலைப்படுத்துங்கள், சுவையை ரசிப்பதையும் மறக்க வேண்டாம்.